யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் விமல்ராஜ் அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும்,நன்றி நவிலலும்.
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும்
துடிக்கின்றோம்
31 நாள் ஆனாலும் மனம்
ஆற மறுக்கிறது- அப்பா
புன்னகை புரியும் உங்கள்
முகம் தெரிகிறது தினம் தினம்!
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்
31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
அழியாது எம் துயரம்
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளையாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா
என்றும் உங்கள் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 03-12-2022 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்திலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனை மற்றும் மதிய போசன நிகழ்வுகள் 05-12-2022 திங்கட்கிழமை அன்று 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். மேற்படி நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.