யாழ். தென்புலோலி சிங்கைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணப்பிள்ளை மங்கையற்கரசி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கருவாய் இருக்கையிலே
உயிராய் வளர்த்தவள்
குழந்தையாய் பிறக்கையிலே
குதூகவித்து மகிழ்ந்தவள்
உதிரத்தைப் பாலாய்
உருக்கித் தந்தவள்
கணப்பொழுதும் கண்மூடாமல்
காத்து வளர்த்தவள்
நாங்கள் சாப்பிடுவதற்காக
நிலவுக்கே சோறூட்டியவள்
நாங்கள் உயர்வதற்கு
ஏணியாய் இருந்தவள்
சுடர் போல் மின்னிட
தூண்டு கோலாக இருந்தவள்
எங்கள் வெற்றி நிழலில்
மறைந்து இருப்பவள்
எங்கள் அம்மா!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 19-05-2022 வியாழக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.