
யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட கோவிலான் செல்வரட்ணம் அவர்கள் 12-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கோவிலான் பெரியபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுணன்(சுவிஸ்), விஜயதர்சினி(ஆசிரியை- சைவப்பிரகாச வித்தியாலயம்), விஜயதர்மினி, விஜயதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றதீபன்(வ/ பூந்தோட்டம் திருஞானசம்பந்தர் GTMS), சுரேஸ், தயாளினி(சுவிஸ்), தனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பூபதி, பூபாலசிங்கம், பூமணி, பூனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மௌனவதி, அம்பிகாவதி, திலகவதி, சித்திராவதி, சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டர்மிகன், கஜமிகன், அதர்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-10-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.