23ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கிருஸ்ணபிள்ளை கணேசமூர்த்தி
1944 -
2002
அச்சுவேலி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 23ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
அரவணைத்தாய் அல்லும் பகலும்
அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய்
வாழ்ந்து நின்றாய்!
உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை எங்களோடு
இருப்பேன் என்றாய்!
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை...
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்