Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 19 OCT 1951
இறப்பு 07 JAN 2020
அமரர் கிருபாதேவி செல்வரட்ணம் 1951 - 2020 நாரந்தனை வடக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நாரந்தனை வடக்கு றோட்டைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை தையிட்டிப்புலத்தை வசிப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு முத்தட்டு மட வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாதேவி செல்வரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்...

அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் நீ பெற்ற இரண்டு முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!

முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!

உங்கள் ஆத்ம சாந்திக்காக 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.