Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 20 DEC 1975
இறப்பு 02 OCT 2020
அமரர் கேதிலன் சதாசிவம்
நில அளவையாளர்
வயது 44
அமரர் கேதிலன் சதாசிவம் 1975 - 2020 பெரிய கல்லாறு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மட்டக்களப்பு பெரிய கல்லாறைப் பிறப்பிடமாகவும், கட்டார் Doha வை வதிவிடமாகவும் கொண்ட கேதிலன் சதாசிவம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், சதாசிவம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

நிமலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷம்ப்ரீத்தி, யுத்திக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மிதிலன், பமிலா, மேகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிருந்தா, பகீரதன், ரவிச்சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேரின்பம், செல்வராணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஸ்வரிக்கா, எபிக்கா, மதுபன், ஆரபி, ஷாகரி ஆகியோரின் அன்பு மாமாவும்,

மிதுறியா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!

நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?

மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!


அன்னாரின் கிரியைகள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.

அன்னாரின் பிரிவில் துயரும்
குடும்பத்தினர்..!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices