யாழ். தென்மராட்சி மந்துவில் கிழக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு வைரவநாதர் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மயூரன், மதனிகா(சுவிஸ்), மயூரதன், மதிவண்ணன்(சுவிஸ்), மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவதர்சினி, கஜேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கதிரேசு கனகசிங்கம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கனிசியன், அன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.