Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 AUG 1943
இறப்பு 12 JAN 2025
திரு கதிரிப்பிள்ளை பொன்னம்பலம்
இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 81
திரு கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் 1943 - 2025 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மாலிசந்தியை வாழ்விடமாகவும், கொழும்பு இல. 25, இராஜசிங்கம் றோட், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
31நாட்கள் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 
எத்தனை நாட்கள்  சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். .

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 12-02-2025 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சரஸ்வதி மண்டபம், இல 75 லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டியில் நடைபெறும். அத்துடன் நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
கிருபாகரன் - மகன்
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.