யாழ். கோண்டாவில் வடக்கு வீரபத்திரர் வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தம்பித்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 24-02-2022 வியாழக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், பின்னர் வீட்டுக் கிருத்தியக் கிரியை 26-02-2022 சனிக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் ”பார்வதி இல்லம்” வீரபத்திரர் வீதி, கோண்டாவில் வடக்கு, கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்திலும் நடைபெறும்.