2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
21
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் அருகம்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு அருளானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் தெய்வமே! நீங்கள் எமைப் பிரிந்து
ஓடியது ஈராண்டு - இருப்பினும்
காயவில்லை எம் ஈரவிழிகள்
புன்னகையுடன் எமை
வழிநடத்தி வாழவைத்த
எம் பாசத்தின் பிறப்பிடமே!
பார்க்குமிடமெல்லாம்
எம் பார்வையுள் தெரிகின்றீர்களே!
இன்று நீங்கள் இல்லாது
புன்னகையைச் சிறைவைத்து
தனிமையில் பேசுகின்றோம்
எங்கள் அப்பாவை எங்கே எப்போ
காண்போம் என்று தவிக்கின்றோம்...
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாங்கள் இறைவனை வேண்டுகின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்