Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 24 AUG 1933
இறப்பு 29 APR 2024
அமரர் கதிரவேலன் கந்தையா (பழனி)
வயது 90
அமரர் கதிரவேலன் கந்தையா 1933 - 2024 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், தென்மராட்சி கோயிலாக்கண்டியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலன் கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா? 

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
31நாட்கள் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா 

எத்தனை நாட்கள்  சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இது நாள்வரை அவரை பார்த்துக்கொண்ட திருமதி சிவமலர் தர்மராஜா, திரு. தர்மராஜா மற்றும் அவரது பிள்ளைகளுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 29.05.2024 புதன்கிழமை அன்று காலை அன்னாரின் sevran இல்லத்தில் நடைபெறவுள்ளது.

இங்ஙனம், பிள்ளைகள் - தர்மராசா(பிரான்ஸ்), சிவராசா(ஜேர்மனி), தங்கராணி(டென்மார்க்)
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute