உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு அருளம்பலம்(அருணாசலம்) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி. திதி: 07-06-2024
ஆண்டுகள் ஏழு அகன்றோடி விட்டாலும் அழியாத நினைவலைகள் எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அப்பா என் செய்வோம் நாங்கள்?
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து எம்மை வழிநடத்த வேண்டும் அப்பா! பாசத்தை அள்ளிக் கொடுத்தாய் அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்! பாசத்தின் பரம்பொருளே எம்மைக் காக்கும் கடவுள் அப்பா!
உங்கள் பசுமையான நினைவுகளை எங்களால் மறக்க முடியவில்லை அப்பா! உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!