4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தவனம் இராசரத்தினம்
(செல்லத்துரை)
அரச சுகாதார திணைக்களம்- இலங்கை, பிரதம லிகிதர்
வயது 89
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தவனம் இராசரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு கழிந்தாலும்
உங்கள் அன்பு முகம் - எம் மனதை
விட்டு நீங்கவில்லை
பண்பில் நிறைந்த ஒளிவிளக்கே
உன் நினைவுகளை நாம் சுமக்க
தூங்காமல் தூங்கியது ஏனோ?
காலம் கடந்ததப்பா,
கவலைகள் ஓயவில்லை
வாய்மை வெல்லும் என்று
வாழ்ந்தவர் நீங்கள் அப்பா
எம் வாழ்வில் நீங்கள் இல்லை
என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில்
நாம் வாழும் காலம்வரை!
நாம் எல்லாம் புலம்புகின்றோம்.....
ஒரு முறை எம்மிடம் திரும்பி வா ஐயா
நீர் வாழ்ந்த இந்த உலகில் உமை
விட்டு வாழ பிடிக்கவில்லை...
எங்கள் இதயங்களெல்லாம் நொருங்க
எங்களைத் தவிக்க விட்டு
நெடுந்தூரம் சென்றதேனோ!!!!
தகவல்:
குடும்பத்தினர்
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், ஆத்ம சாந்திக்காக பிராத்திக்கின்றோம்.