யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குழந்தை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத் தலைவி அமரர் கந்தையா குழந்தை அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்த வேளையில் மீளாத் துயரில் இருந்த எமக்கு ஆறுதல் நல்கி எமது துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், பதாதைகள், கண்ணீரஞ்சலிகள் மூலம் அனுதாபம் தெரிவித்த நண்பர்களுக்கும் மரணச் செய்தியை ஒளிபரப்பிய சுடர் TV நிறுவனத்திற்கும், செய்தியை பிரசுரம் செய்த லங்காசிறி இணைய செய்தி நிறுவனத்திற்கும், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் உணவு தந்து உபசரித்தோருக்கும் நோயுற்றிருந்தவேளை வைத்திய உதவிகளை வழங்கிய Modern New Medi Care நிறுவனத்தின் வைத்தியர்கள் மற்றும் 5 பணியாளர்களுக்கும் அந்தியேட்டிக் கிரியையின் போது உதவி ஒத்தாசை புரிந்த அன்பர்கள், நண்பர்களுக்கும் இறுதிக் கிரியை, அந்தியேட்டிக்கிரியைகளை நடாத்தித் தந்த அந்தணக்க குருமார்களுக்கும், இம்மலரை வடிவமைப்புச் செய்த ஸ்ரீராம் கிறபிக் அன் பிறின்டேர்ஸ் நிறுவனத்திற்கும் எமது அழைப்பை ஏற்று இல்லம் நாடி வந்து மதியபோசனத்தில் கலந்து கொண்டு அவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் 16-02-2022 புதன்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றோம்.