Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 07 DEC 1934
விண்ணில் 26 FEB 2021
அமரர் கண்மணி சரவணமுத்து
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 86
அமரர் கண்மணி சரவணமுத்து 1934 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர் மற்றும் பாண்டிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கண்மணி சரவணமுத்து அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும், கந்தையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சரவணமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

விக்கினேஸ்வரன்(அமெரிக்கா), அமிர்தகலாதேவி, சுசிகலாதேவி, உமாவரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மைதிலி(அமெரிக்கா), பாக்கியராஜா, பரமகுருநாதன், குந்தவி ஆகியோரின் அன்பு மாமியாரும்.

அங்கணி(அமெரிக்கா), அனுராம்(அமெரிக்கா), கிஷாணியா, ஏரகன், ரேவதன், முறோஷிக்கா, எழிலாஷினி, துஷாரகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பெரியகல்லாற்றில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices