முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட கணேஸ்வரி சிவலோகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பை விதைத்த தலைவியே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 31 நாட்கள் ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
நீங்கள் காட்டிய பாதை
எமக்கு
கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!
கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 18-02-2026 புதன்கிழமை அன்று கெரிடமடு புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 20-02-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து, நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.
முகவரி:
சிவன் கோவிலடி,
ஒட்டுசுட்டான்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.