Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மண்ணில் 07 MAY 1922
விண்ணில் 27 DEC 2021
அமரர் கந்தையா தில்லையம்பலம்
ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர், வதிரி சனசமூக நிலைய போஷகர், சபைத் தலைவர்- வதிரி மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் தர்மகர்த்தா, முன்னாள் பொருளாளர்- வதிரி கனகசிங்கப் பிள்ளையார் ஆலயம், முன்னாள் பரிபாலன சபைத் தலைவர்- வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய, வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் நலன் விரும்பி
வயது 99
அமரர் கந்தையா தில்லையம்பலம் 1922 - 2021 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வதிரி கரவெட்டி கதிர்காம கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தில்லையம்பலம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 24-01-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். அன்னாரின் சபிண்டீகரணக் கிரியைகள் 26.01.2022 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.