Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 SEP 1941
இறப்பு 03 JUN 2020
அமரர் கந்தையா சிவசம்பு (நவரத்தினம்)
ஓய்வுபெற்ற உதவி தொழில்நுட்ப பொறியியலாளர், இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் LMS LTD, புல்மோட்டை
வயது 78
அமரர் கந்தையா சிவசம்பு 1941 - 2020 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசம்பு அவர்கள் 03-06-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, காசிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்திரசேகரம், மாணிக்கம் தம்பதிகளின் அருமை மருமகனும்,

காலஞ்சென்ற இரதிதேவி(றாதா) அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(லண்டன்), கெளசலை(ஆசிரியை– யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), குகேந்திரன்(கஜமுகன் பல்பொருள் வாணிபம், புத்தூர்சந்தி மீசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவதாசன்(லண்டன்), புஸ்பதனராஜன்(Instructor- NAITA), சுபரஞ்சினி(ஆசிரியை- யா/சாவகச்சேரி இந்து கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, கைலாயபிள்ளை மற்றும் காமாட்சி(ஆசிரியை Driberg College) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன்(முன்னாள் தபாலதிபர் மீசாலை)- சாந்தினி, ரஞ்சினி- நடராஜா(Surveyor), மீனாட்சி, இராசம்மா, வைகுந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜீபன், ரன்ஜா, கஜனி, ஜஸ்ருதி, சேசிகன் ஆகியோரின்  அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மீசாலை வடக்கு வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.      

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 03 Jul, 2020