யாழ். பலாலி கிழக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 17-08-2023 வியாழக்கிழமை அன்று மு.ப புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். வீட்டுக்கிருத்திய கிரியை 19-08-2023 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால், அத்தருணம் தாங்கள் வருகை தந்து அவரதுஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள்