7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா புண்ணியமூர்த்தி
ஓய்வுபெற்ற சிரேஷ்ட தபால் அதிபர்
வயது 88
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா புண்ணியமூர்த்தி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் அன்பை இழந்து
ஆண்டு எழு ஆனதுவோ....!!
உங்கள் முகம் கண்டு!
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம் நிரந்தரமானதோ என்னவோ...
இன்னமும் காயவில்லை அப்பா!
கணப் பொழுதும் எண்ணவில்லை
இவ்வாறு நடக்குமென்று எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை நெஞ்சம் எல்லாம்
வலிகளுடன் நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில் எம் கண்கள்
உடைந்து கண்ணீர் இன்றும் பெருகுதையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்