அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு, கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நாகம்மா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து ஆண்கள் பல ஆனதம்மா! பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும் பெற்றவள் அன்பு போல் வருமா? நம்மைப் பெற்றவளின் தாய் மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது... விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே! உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் கொடுத்த உயிரே! இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து எமக்காய் உன் உறக்கம் துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும் அநாதையாய் தவிக்கின்றோம்…!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
சுரேஸ் பிரேமச்சந்திரன் MA, Dr. மனோகரன், Dr.சர்வேஸ்வரன்