Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1952
இறப்பு 14 JUN 2024
திரு கந்தையா ஜெயநிதி 1952 - 2024 அச்சுவேலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கு பயித்தோலையை வசிப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயநிதி அவர்கள் 14-06-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

திருமாறன்(கனடா), ரூபஜெனா(இலங்கை மத்திய வங்கி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அனிதா(கனடா), Dr.வேணுகோபன்(மகரகம வைத்தியசாலை, இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr.கருணாநிதி(கனடா), கிருபாநிதி(கனடா), பதுமநிதி(இலங்கை), அருள்நிதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாநிதி, ரூபநிதி மற்றும் கெங்கநிதி(டென்மார்க்), காலஞ்சென்ற நவநிதி, சங்கநிதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தலாதேவி ஜெயச்சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற வசந்தலாராணி இராசரத்தினம், வசந்தறூபி பரமேஸ்வரன்(சுவிஸ்), வனஜா முத்துக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜன்(கனடா), அஸ்வின்(கனடா), ஜஷோன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2024 திங்கட்கிழமை மு.ப 10:00 மணியளவில் அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முழக்கன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr.வேணுகோபன் - மருமகன்
திருமாறன் - மகன்