8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா பாலசுப்பிரமணியம்
(சின்னைய்யா)
வயது 88

அமரர் கந்தையா பாலசுப்பிரமணியம்
1927 -
2015
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Swiss Zurich Dielsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
உங்கள் அரவணைப்பில்
இல்லறம் வாழ்ந்திருந்தோம்
இன்று நாம் தவிக்கின்றோம்
நீங்கள் இன்றி ஏங்குகின்றோம்
உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும்
பாசத்தையும் காட்டி உங்கள்
கண்களுக்குள் வைத்து
வழிகாட்டி வளர்த்தீர்கள்!
எத்தனை ஆண்டுகள்
நகர்ந்தாலும் உங்கள் நினைவு
எமை விட்டு அகலாது நாங்கள்
உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே
என்றும் நீங்கள் தான் வானுலகம்
சென்றாலும் எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்