Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 08 OCT 1943
விண்ணில் 15 MAY 2022
அமரர் கந்தையா அருளானந்தம்
தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் பலெர்மோ, இத்தாலி
வயது 78
அமரர் கந்தையா அருளானந்தம் 1943 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அருளானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் திருவுருவாய்
அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!
 நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
 கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!
 எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
 எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
 உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


நீண்டகாலத் தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளராகவும், முன்னைநாள் திலீபன் தமிழ்ச்சோலை நிர்வாக உறுப்பினராகவும் தன்னலங்கருதாது இறுதி வரை மாந்தநேயத்துடன் பல பணிகளை ஆற்றி வந்த நாட்டுப்பற்றாளர் சபாரட்ணம் வாமதேவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 17-05-2023 புதன்கிழமை அன்று பி.ப 06.30 மணியளவில் திலீபன் தமிழ்ச்சோலை எனும் முகவரியில் நடைபெறவுள்ளதால் அனைத்து உறவுகளையும் இவ்வணக்க நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 17 May, 2022