
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kandasamy Soundararaja
1959 -
2021

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் சௌந்தர் அண்ணாவின் பேரன்பில் கட்டுப்பட்டவன் நான். அவருடன் பழகிய ஒவ்வொரு கணமும் இனிமையானவை, இரை மீட்க, மீட்க உற்சாகம் தருபவை. பிறருக்காகவே வாழ்ந்த பெரு மானிடன் அவர். இப்படியும் அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள் என எப்போதும் எனை வியக்க வைத்த மிக உயர்ந்த மனிதர். அவருடன் பழகிய என் பதின்ம வயதுகளில், அவரிடம் இருந்து கற்றுக் கொண்டவை மிக அதிகம். சௌந்தர் அண்ணா! போய் வாருங்கள்! மதுரை வீதிகளில் கலகலத்து திரிந்த எங்கள் போதுகள், காலப் பெருவெளியில் ஒருபோதும் கரைந்து போகாது. அதே சிரிப்புடனும், அரவணைக்கும் பேச்சுடனும் நீங்கள் என் நினைவுகளில் எப்போதும் உயிரோடிருப்பீர்கள்.

Write Tribute