Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 OCT 1927
மறைவு 04 FEB 2021
அமரர் கந்தசாமி குணரத்தினம்
ஓய்வுபெற்ற மேலதிக மாவட்ட பதிவாளர் கச்சேரி- யாழ்ப்பாணம்
வயது 93
அமரர் கந்தசாமி குணரத்தினம் 1927 - 2021 சங்கரத்தை வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 40 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கொழும்பு, வட்டு கிழக்கு வட்டுக்கோட்டை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி குணரத்தினம் அவர்கள் 04-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்(ஓவசியர்) தனலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

ரவீந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற பாலேந்திரன், யமுனா(பிரான்ஸ்), சேகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜ்குமாரி(பிரித்தானியா), வருணராசா(பிரான்ஸ்), அகல்யா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தையல்நாயகி, குலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Dr. பசுபதிராஜா(பிரித்தானியா), தர்மலிங்கம்(பரஞ்சோதி), காலஞ்சென்றவர்களான சிவசோதிராசா, கனகமணி மற்றும் ஜெயலட்சுமி(கனடா), செல்வராசா(அவுஸ்திரேலியா), வசந்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவன், மித்திரன், கரிஸ், அபிலாஸ், அஸ்மிகா, சேஜகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 06:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்