யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி ஆச்சிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வு 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது மகளின் இல்லத்திலும்(பழையகமம்) நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்களும் வருகைதந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்னிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:-
பழையகமம்,
முரசுமோட்டை.