கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாய் வடக்கை(மாயக்கை) வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் அம்மா
அமைதியின் தேவதை
எங்கள் அம்மாவிடம் இல்லை ஆசை
எங்கள் அம்மாவிடம் இல்லாதது இல்லை
எங்கள் அம்மாவிற்கு இன்பம் ஈகை
எங்களுக்கு அம்மா தருவது உற்சாகம்
என்றென்றும் எங்கள் அம்மா - ஓர் தஞ்சல்
ஐக்கியமாய் வாழுங்கள் என்றார்
ஒற்றுமையும் உன்மையும் வேண்டும் என்றார்
ஓசையின்றி சென்று விட்டார்
ஊமைகளானோம்
எங்கள் அன்புத்தெய்வம் அம்மாவே
எங்குகாண்போம் உம்மை என்று காண்போம்
என்றும் நீங்கள் எங்கள் இதயத்தில்
சுமப்போம் சுகத்துடன்
உயர்வான வாழ்வும் வளமும் கிடைத்திட
அருள் புரி எல்லாம் வல்லவனே
இறைவா இறைவா இறைவா
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.