15ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் கணபதிப்பிள்ளை உதயகுமார்
                            (உதயன்)
                    
                            
                வயது 49
            
                                    
            
        
            
                அமரர் கணபதிப்பிள்ளை உதயகுமார்
            
            
                                    1961 -
                                2010
            
            
                புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    4
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 10 வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூண் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு பதினைந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?  
 கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
என்றும் உயிர் வாழும் எங்கள்
இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும்  
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது
நெஞ்சில் உங்கள் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே
நிலைத்து வாழ்வோமே
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  
                        தகவல்:
                        குடும்பத்தினர்