கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு, இறுதி நிகழ்வினை நேரில் சென்று பார்த்ததை போல நேரடி ஒளிபரப்பு செய்துகொடுத்த லங்காசிறி நிறுவனத்துக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.