யாழ். குடாரப்பு நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை புத்தூர்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
சிவமலர்(பாலு) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குமாரசாமி, சிறீஸ்கந்தராஜா மற்றும் மனோன்மணி(பளை), முருகையா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவாணி(லண்டன்), கஸ்தூரி(லண்டன்), காண்டீபன்(கனடா), கர்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகேந்திரன்(குகன்) அகிலேஸ்வரன்(அகிலன்), சுபதா(கெளரி), வினோதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஹானா, சானுஜா, அபிரன், அபிஷ்னன், றியானா, பவிர்ணா, நேஹா, நிதிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2026 வியாழக்கிழமை மு.ப 11.00 மணியளவில் மீசாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
வீட்டு முகவரி:-
புத்தூர்சந்தி, மீசாலை,
யாழ்ப்பாணம்