Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1940
இறப்பு 20 FEB 2021
அமரர் கணபதிப்பிள்ளை மார்க்கண்டு
ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, கரைதுறைப்பற்று முன்னைநாள் கலைமகள் வித்தியாலய அதிபர், சமாதான நீதவானும் கரைதுறைப்பற்று மத்தியஸ்தசபை உறுப்பினர்
வயது 80
அமரர் கணபதிப்பிள்ளை மார்க்கண்டு 1940 - 2021 கணுக்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குட்டித்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கணேசம்மா(முன்னைநாள் ஆசிரியை கலைமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன்(அதிபர்), காலஞ்சென்ற  பங்கையச்செல்வி, நரேந்திரன்(கிராம உத்தியோகத்தர்- முள்ளியவளை மத்தி), சுரேந்திரன்(உள்ளுராட்சி உதவியாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை), கலைச்செல்வி(ஜேர்மனி), தமிழ்ச்செல்வி(பிரான்ஸ்), தவச்செல்வி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திரா, சிவமதி(ஆசிரியை- வவுனியா), மாலினி, தவராஜா(ஜேர்மனி), றஜிதனன்(பிரான்ஸ்), கைலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லக்கண்டு, துரைசிங்கம்(கணுக்கேணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற அருணாசலம்(ஓய்வுபெற்ற மக்கள்வங்கி முகாமையாளர்), மகாலிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), லோகசெளந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற கணக்காளர்), தேவலிங்கம்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துலாஞ்சலி, நதீசன், கிருஜன், வித்தகி, அறிவரசி, அனிஷன், சுவாதி, சுவர்ணி, வினோத், சிந்தியா, மதீஸ், தமிழரசி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices