Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 07 SEP 1935
இறப்பு 10 MAY 2022
அமரர் கணபதிப்பிள்ளை அமிர்தமணி
வயது 86
அமரர் கணபதிப்பிள்ளை அமிர்தமணி 1935 - 2022 மண்டைதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அமிர்தமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்பின் பேருருவமே
இக்குடும்பத்தின் ஆணிவேரே
அல்லல் பிடித்ததுவோ
எம் குடும்பத்தின்
அகல் விளக்கை அணைத்ததுவோ
என்னவென்று விம்புவேன்
உம் பிரிவை தெய்வமே
மழலை போன்ற உமை
மறந்து எப்படி நாம் வாழ்வது
மனமுருகி நாம் அழும் கண்ணீருக்கு
விடை தரமால் சென்றது ஏனோ
உம் போல் கவனிக்க
எமை கவனப்படுத்த
இவ் வீட்டில் யாரைத் தேடுவோம்
எங்கிருந்தாலும் எங்களோடு - உம்
அன்பு ஆத்துமா நீடித்து இருக்குமென்ற
நம்பிக்கையில் கண்ணீர் மல்க
மலர் சாந்தி செய்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 09-06-2022 வியாழக்கிழமை அன்று பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல.16 மடம் வீதி,
யாழ்ப்பாணம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.