Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 14 JUN 1942
இறைவன் அடியில் 15 MAR 2022
அமரர் கனகசபை மீனாம்பாள் 1942 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு உம்பிச்சி பிளேஸ், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மீனாம்பாள் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆயிரம் சொந்தங்கள்
அருகில் இருந்தாலும்
அன்னையே உம்மைப் போல
யாரும் இங்கில்லையே!
உங்களுடன் வாழ்ந்த வாழ்வினை
தினமும் எண்ணி தவிக்கின்றோம் - அம்மா
மீண்டும் ஒர் பிறப்பிருந்தால்
நீங்களே எம் தாயாக வரவேண்டும்
என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழ்கின்றோம் அம்மா!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 19 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்