Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 14 JUN 1942
இறைவன் அடியில் 15 MAR 2022
அமரர் கனகசபை மீனாம்பாள் 1942 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு உம்பிச்சி பிளேஸ், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை மீனாம்பாள் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-03-2024

ஓர் உணர்வான ஒற்ரை சொல் அம்மா
உன் அன்பின் கதகதப்பும்
உன் வலிக்காத தண்டனையும்
இனி யாராலும் தரமுடியாதம்மா..

அம்மா? என்று குரல் எழப்புகிறோம்
ஆனால்... பதில் இல்லையே!
நீங்கள் பிரியில்லையம்மா...
எங்களோடு வாழ்ந்து கொண்டு
இருக்கிறீங்கள் அம்மா…

எங்கள் அன்பு தாயே!
எங்கள் ஆசை அம்மாவே
ஆண்டு இராண்டு மறைந்து போனாலும்
எப்பொழுதிலும் என்றும் ஆறாத
துயரத்தில் ஆழ்ந்து இருக்கின்றோம்
அம்மா... 

ஈராண்டு காலம் இமைப்பொழுதில் போனதே அம்மம்மா
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும் 
உன்னைப்போன்று அன்பு செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்!
எங்களை சீராட்டி சோறுட்டி வளர்த்த நீங்கள்
விட்டுப் பிரிந்ததேன்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்!

தகவல்: ரூபி(மகள்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos