யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் றோட் பாரதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பேரின்பநாதன் அவர்கள் 14-05-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
லியானி, யுகதாஸ், கவிவர்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யதீசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
விஸ்மிகா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பூலோகசிங்கம், பற்குணநாதன், காலஞ்சென்ற ஜெகநாதன், நாகசோதி, ஜெகசோதி, சிவசோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோதிமதி, காலஞ்சென்ற றஞ்சினி, இந்திராணி, மாணிக்கவாசகர், ஜெயக்குமார், பாபுஜீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று 39/2 பாரதி வீதி கச்சேரி நல்லூர் றோட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +14164024534
- Mobile : +94762924188
- Mobile : +16478604964