2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரத்தினம் தருமபூபதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே எங்கள்
இதயங்களில் கோயிலாய்
வாழ்கின்ற அம்மாவே!
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே நீங்கள் எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
பொற்காலம் அம்மா!
அகவை இரண்டு அகன்றே
நின்றாலும் அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே எங்கள்
உயிரினுள் உயிராகி உறவிலே
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
பிள்ளைகள்