

கண்ணீர் அஞ்சலி அமரர் கனகலிங்கம் சிவதேவி. குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு..... விதி வரைந்த பாதைஇங்கே முடிவடைந்து போனதுவோ... விழி மூடித் துயில் கொள்ளும்... நிலை இன்று ஆனதுவோ.... கதி கலங்கி அழுகின்றோம்.. கண்ணீரில் மிதந்தபடி காயமது பொய்யோ.. வெறும்.. காற்றடைத்த பையோ.. காலமிட்ட கட்டளைக்கு விதி விலக்குமுண்டோ.. விழி வளிந்த கண்ணீரில்... மிதந்தபடி... விம்மி விம்மி.. அழுதழுது விடைகொடுத்தோம்.. சென்றுவருக... இருளும் ஒளியும் இரண்டறக் கலந்ததாய் இன்பமும் துன்பமும் நிறைந்த இவ் உலகினில் பிறப்பதும் இறப்பதும் இயற்கையின் நியதியே.. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கேற்று கொள்வதுடன்... ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.. ஓம் சாந்தி சாந்தி சாந்தி. தம்பையா குடும்பத்தினர்.