கமலா அக்கா என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது, வார இறுதி நாட்கள்தான். கமலா அக்காவுக்கு ஆசிரியையாக புற்றளை மகாவித்தியாலத்தில் வேலை. அவரது கணவர் நவரத்தினம் அண்ணணுக்கு கொழும்பில் வேலை. கிழமைகளில் ஐந்து நாட்கள், 240 மைல்கள்அவர்களைப் பிரித்து வைத்திருந்தன.
நாட்டில் எது நடந்தாலும் வார இறுதியில் நவரத்தினம் அண்ணன் ஊருக்கு வந்து விடுவார். அவர்கள் இருவரும் எவ்வளவு அன்பாக இருந்தார்கள்என்பதை ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாட்கள் காண்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் நவரத்தினம் அண்ணன் கொழும்புக்குப் பயணமாகும் போது இருவரது முகங்களிலும் தெரியும் கவலைகள் எங்களையும்கவலையடையச் செய்யும். பயணப் பையுடன் நவரத்தினம் அண்ணன் வீதி வளைவில் மறையும் வரை கமலா அக்கா வாசலில் சோகமாக நிற்பதுவும் மறையும்தருணத்தில் ஒரு கணம் நின்று நவரத்தினம் அண்ணன் கையசைத்துச் செல்லும் காட்சியும் இன்றும் பசுமையாக....
வாசுகி, வைகுந்தன் மற்றும் கமலாக்காவின் உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்
ராஜா, சீலன், கமலா, செல்வகுமாரன்
Sorry for your Loss Vasuki. Our thoughts and prayers are with you during this difficult times. May her soul rest in peace. Lohini