யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோண் பொஸ்கோ ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 06-03-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 8.00 மணியளவில் தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். இதனைத்தொடர்ந்து தாளையடியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலும், STADE DE FRANCE இல் உள்ள மகளின் இல்லத்திலும் நடைபெறும் மதிய இரவு போசன நிகழ்வில் கலந்து அப்பாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்களையும் தங்கள் குடும்ப சகிதம் அன்புடன் அழைக்கின்றோம்.
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.