யாழ். தெல்லிப்பழை ஆனைக்குட்டி மதவடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயம் ராஜபதி எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்திநாதர் செல்வராணி தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை மேரிதிரேசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
எமிலியானுஸ்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
றெஜி பார்த்தீபன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
டயான் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற மனுவல் ராஜசுந்தரம், ராஜமனோகரி, ஜோசப் ராஜ சூரியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற புஷ்பம், ஜோசப் தம்பிநாயகம், வத்சலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க திருப்பலி 10-08-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து தெல்லிப்பழை புனித பேதுரு, புனித பவுல் ஆலய சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.