யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி தருமகுலசிங்கம் அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு கனகம்மா(முன்னாள் ஸ்ரீமுருகன் அரிசி ஆலை- கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தருமகுலசிங்கம் (உரிமையாளர் பவித்திரா கோல்ட் ஹவுஸ்- கொச்சிக்கடை) அவர்களின் அன்பு மனைவியும்,
பவித்திரா(கனடா), விசுவதன், உபேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருண்ரஜீதரன்(கனடா) அவர்களின் அன்பு மாமியும்,
ஆருத், சர்வேஷ், ஹிமேஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்ற அமிர்தலிங்கம், தனலட்சுமி(S.K.T சுவிஸ்), செல்வலட்சுமி(பிரான்ஸ்), குணலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெகதீஸ்வரி கமலநாதன்(ஜெகம் நகையகம்- கிளிநொச்சி), புஸ்பராணி(ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி), திருஞானசம்பந்தன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), யோகேஸ்வரன்(ஜெனுயின் மோட்டர்ஸ் -யாழ்ப்பாணம்), நந்தினி, காலஞ்சென்ற கணேஷ்குமார், சந்தனலட்சுமி, கதிர்காமநாதன்(S.K.T சுவிஸ்), குழந்தைவேல், ரமணி(பிரான்ஸ்), ராதா கெளரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-10-2022 வியாழக்கிழமை அன்று 101/2, பள்ளஞ்சேனை, கொச்சிக்கடை எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு மஞ்ஞொக்க பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details