1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெனிதா யோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
என்றும் அணையாத சுடராய்
எல்லோர் மனதிலும்
வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள் அம்மா.
கணப்பொழுதில் நடந்தது என்ன
உன் இறுதி மூச்சு காற்றோடு கலந்தது என்ன
நம்ப முடியவில்லை நடந்தது என்னவென்று
அம்மா அம்மா யாரைக் கூப்பிடுவோம்
எழுந்து எமக்கு ஒரு முத்தம் தாராயோ!
ஆண்டு ஒன்று கடந்தாலும்
கடலைப் போலே வற்றாத
உங்கள் அன்பு அலை நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் வேண்டி நிற்கும்
உங்கள் பிள்ளைகள் கணவன்
தகவல்:
குடும்பத்தினர்