11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யதுசன் சண்முகநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களை இமை காப்பது போல
நாம் காத்து வந்த எம் செல்ல மகனே!
வையகத்தில் நீ வளமோடு வாழ்வாய் என
வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனா ஏராளம்
அத்தனையும் நீ கனவாக்கி எங்கு சென்றாய் ஐயா!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா
என்று
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
படைத்தவனுக்கு புரியும் அது
வந்து
நொடிப் பொழுதில் ஆனால்
நாம் நினைக்கவில்லை
ஆண்டோ 11 போனது
மனமோ ஆறவில்லை
நின் திருவுருவம்
என்றென்றும்
எம்முடன் ஆண்டவனாய்
ஜென்மம் எல்லாம் இருக்கும் ஐயா
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute