Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 20 NOV 1957
விண்ணில் 27 SEP 2020
அமரர் ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி 1957 - 2020 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 63 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜானகிதேவி ஆனந்தமூர்த்தி அவர்கள் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அ.க கந்தையா(கண்ணையா மாஸ்டர், இளைப்பாறிய அதிபர்) சற்குணம்(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் கனிஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கந்தையா மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. V. K. ஆனந்தமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

மரியானந்தா, றிஷானந்தா, சிவானந்தா, அனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவமனோகரன்(பிரான்ஸ்), வாசுகிதேவி(கனடா), காலஞ்சென்ற பிரபாகரன் மற்றும் அருந்ததிதேவி(கனடா), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நிஷாந்த் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகராசா, பாலசிங்கம் மற்றும் பரஞ்சோதி(கனடா), மர்லின், ராதாகிருஸ்ணன், மத்யூஸ், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனலெட்சுமி, உலகநாயகி, மங்களாம்பாள் ஆகியோரின் அன்புச் சகலியும்,

அமலன், கியானு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்