
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி யோகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
25-01-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்த எமது குடும்பத்தலைவரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 24-02-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து எமது அன்புத் தெய்வத்தின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு ஓடோடி வந்து எமக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தோருக்கும் இறுதிச் சடங்கில் கலந்து அனுதாபத்தை தெரிவித்த அனைவருக்கும் பதாதைகள் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும் மலர்வளையங்கள் சாத்தியும் தமது அனுதாபங்களைத் செலுத்திய நல் உள்ளங்களுக்கும் எமக்கு பல வழிகளில் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும்.