

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் அடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கைலாசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-05-2025
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் ஐயா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம் ஐயா!
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீர்களோ?
நீங்கள் எம்மைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கின்றோம் ஐயா...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம் ஐயா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!