Clicky

அன்னை மடியில் 08 DEC 1934
ஆண்டவன் அடியில் 21 MAY 2021
அமரர் செல்வராணி தியாகராசா
வயது 86
அமரர் செல்வராணி தியாகராசா 1934 - 2021 மண்கும்பான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அம்மா
Late Thiyagaraya Selvarani
மண்கும்பான், Sri Lanka

1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி ? 2.முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும் அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் ? 3. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும், தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டுவேன் ? 4. நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல் கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ மெய்யிலே தீமூட்டுவேன் ? 5. அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு ? 6. அள்ளி இடுவது அரிசியோ ? தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ ? கூசாமல் மெள்ள முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன் மகனே” என அழைத்த வாய்க்கு ? 7. முன்னை இட்ட தீ முப்புரத்திலே; பின்னை இட்ட தீ தென் இலங்கையில்; அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே! 8. வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ! – மாகக் குருவிபறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை. 9. வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ – சந்ததமும் உன்னையே நோக்கி உகந்துவரம் கிடந்துஎன் தன்னையே ஈன்றெடுத்த தாய் ? 10. வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்! நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; – பால்தெளிக்க எல்லீரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்! துறவியே ஆகிப் போனாலும் ஒவ்வொரு ஆண்மகனும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றி முன்னோர்கள், ஞானிகள், சித்தர்கள் ஆகியோரின் ஆசிகளை பெற்றுய்வோம். வாழ்க வையகம்!

Write Tribute