
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், புஸ்ஸல்லாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஹேமலதா உதயராஜ் அவர்கள் 26-01-2019 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பூலோகேந்திரன் தம்பதிகளின் மகளும், திரு. திருமதி பூபாலன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயராஜ்(ஆசிரியர் ஆலோசகர் கொத்மலை வலையக் கல்வி அலுவலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
பூங்குழலி, கஜானன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேனுகா, சுதாகரன், சுலோஜனன், அமிர்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், தவமலர், காலஞ்சென்ற வத்ஸலா, குலேந்திரன், ரஜனி, தமிழ்ச்செல்வி, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் புஸ்ஸல்லாவ பொதுமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்கள் .ஹேமாக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ?