Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 18 DEC 1989
இறப்பு 30 JUN 2024
திருமதி கௌசல்யா துசிகாந்தன் (கௌசி, துர்க்கா)
வயது 34
திருமதி கௌசல்யா துசிகாந்தன் 1989 - 2024 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sheerness ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கௌசல்யா துசிகாந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஓர் மாதம் மறைந்து விட்டது !
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்எங்களை
நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
மாதம்தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ என்பார்கள்
அது எமது அறிவுக்குத் தெரிகிறது
ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே!
பாசத்தின் முழு உருவம் 
பாதியிலே எம்மை விட்டு ஏன் போனீர்கள்?
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும்
இறைவனை வேண்டி நிற்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வு 10-08-2024 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெறும். பின்னர், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆத்மா சாந்திய பிராத்தனை மற்றும் மதியபோசன நிகழ்வில் அனைவரும் பங்கேற்றுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Address:
Castle Cafe,
Well Road,
Queenborough ME11 5AY,
United Kingdom.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துசிகாந்தன் (காந்தன்/ராஜ்) - கணவர்
பாலா - தந்தை
கஜன் - மைத்துனர்
சுதா - மாமி
கோபி (Kresh) - மைத்துனர்
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 05 Jul, 2024